வாளைச் சுமக்கிறாயா?



அவர் என்னுடைய எதிரிகளுக்குத் தீமைக்குத் தீமையைச் சரிக்கட்டுவார், உமது சத்தியத்திற்காக அவர்களை அழியும்.  சங். 54:5

நீ வாளைச் சுமந்து திரிகிறாயா? ஜாக்கிரதை! கோலியாத்தின் தலையை வெட்டுவதற்கு தாவீதுக்கு ஒரு அற்புதமான வாள் எங்கிருந்து கிடைத்ததென்று உங்களுக்கு தெரியுமா? அது கோலியாத்திடம் இருந்தது (1 சாமு. 17:51).

மற்றவர்களுக்காக நீ கண்ணி வைத்தால், நீயே அதில் சிக்கிக்கொள்வாய். (நீதி. 26:27). உன் எதிரிகளுக்கு விரோதமாக நீ உன் மனதையும், வார்த்தைகளையும், செயல்களையும் உருவாக்குகிறாயா? அப்படியென்றால், அவையெல்லாம் உனக்கே அழிவை ஏற்படுத்தக்கூடும் என்பதை நினைவில் கொள். இறுதியில் உனக்கே அழிவை ஏற்படுத்தும் எதையும் சுமந்து திரியாதே! 

வாளை எடுப்பவன் வாளாலேயே கொல்லப்படுவான்!

ஜெபம்: கர்த்தாவே! என் வாழ்நாள் முழுவதும் எனக்கு எதிரிகளே இராதபடி, உம்முடைய அன்பினால் என்னை அதிகமாய் நிரப்பும். ஆமென்!

(translated from English to Tamil by Melwin Kingsley)

Comments

Popular posts from this blog

What is your good name?

Who is truly wise?

God doesn’t exist!?