பரத்தில் உங்கள் புட்டி!

B.A. Manakala

என் அலைச்சல்களைத் தேவரீர் எண்ணியிருக்கிறீர்; என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது? சங். 56:8.

நான் வெங்காயம் அரிகையில், எனக்கு எளிதில் அருவியெனச் சொரிகிற கண்ணீர், தினமும் ஜெபிக்கையில் மட்டும் வருவதே அரிதாகிறது!

நாம் பரலோகத்திற்குப் போகிற பொழுது, அங்கே ஒரு வியப்பூட்டும் புட்டியை நாம் பார்க்கப் போகிறோம் (சங் 56:8). துக்கம், மகிழ்ச்சி, நேர்மை போன்ற வெவ்வேறு உணர்ச்சிகளைக் குறிக்கக் கண்ணீர் வெளிப்படலாம். பொதுவாக, நம் சொந்தத் தேவைகளுக்காக நாம் ஊக்கமாய் ஜெபிக்கையில், நம்மால் கண்ணீர் சிந்த முடிகிறதல்லவா? 

துயரப்படுகிறவர்களைக் கர்த்தர் ஆசீர்வதிக்கிறார். அவர்கள் ஆறுதலடைவார்கள் (மத் 5:4). விருந்து வீடுகளைக் காட்டிலும், துக்க வீடுகளில் உங்கள் நேரத்தைச் செலவிடுதல் நலம் (பிர 7:2). நகைப்பைப் பார்க்கிலும் துக்கிப்பு நலம் (பிர 7:3). ஆகிலும், ஆரோக்கியமற்ற துக்கத்தையும், கவலையையும் ஊக்குவிக்காதீர்கள் (பிர 11:10). ஆவியின் கனியுள் ஒன்று 'சந்தோஷம்' என்பதை நினைவில் கொள்ளுங்கள் (கலா 5:22).

பரலோகத்தில் சேமிப்பது உங்கள் முன்னுரிமையாய் உள்ளதா? 

உலகக் கவலை க்ஷணப் பொழுதே; பரலோக மகிழ்ச்சியோ நித்தியம்! 

ஜெபம்: கர்த்தாவே! நான் பிறருக்காக அழுவது அர்த்தமுள்ளதாய் அமையவும், நீர் தருகிற நித்திய மகிழ்ச்சி மீது இன்னும் கவனம் செலுத்தவும் எனக்குப் போதித்தருளும். ஆமென்!

(translated from English to Tamil by Catherine Joyce)

Comments

Popular posts from this blog

Who is truly wise?

What is your good name?

God doesn’t exist!?