'நீங்கள் விரைவில் இறந்துவிடுவீர்கள்!'



கடுந்துயரம் என் உள்ளத்தைப் பிளக்கின்றது; சாவின் திகில் என்னைக் கவ்விக்கொண்டது. சங் 55: 4

COVID19 தொற்றுநோய் இல்லாமல் இருந்தாலும், மரணம் என்பது எவரும், எந்த நாளிலும், எங்கும் எதிர்கொள்ளக்கூடிய ஒரு உண்மை அல்லவா?  நீங்கள் ஆரோக்கியமாக இருந்தாலும் சரி, நோய்வாய்ப்பட்டவர்களாக இருந்தாலும் சரி, பணக்காரர்களாக இருந்தாலும் சரி, ஏழைகளாக இருந்தாலும் சரி, வெள்ளைக்காரர்களாக இருந்தாலும் சரி, கறுப்பர்களாக இருந்தாலும் சரி, நாம் அனைவரும் ஒரு நாள் மரணத்தை எதிர்கொள்ளவே வேண்டும்!

'நீங்கள் விரைவில் இறந்துவிடுவீர்கள்' என்னும் அறிக்கை உங்களை பயமுறுத்துகிறதா?  மரணத்தை எதிர்கொள்ள நீங்கள் எவ்வளவு ஆயத்தமாக இருக்கிறீர்கள் என்பதை இது காட்டுகிறது?  மரணம் எல்லாவற்றிற்கும் முடிவு என்று நீங்கள் நினைப்பது மட்டுமல்ல,  மரணத்திற்கு நீங்கள் அதிகமாக அஞ்சுகிறீர்கள் என்றால், உங்களுக்கு ஒரு மாற்றம் தேவை. தேவன் உங்களுடன் இருக்கும்போது, நீங்கள் மரணத்திற்கு அஞ்சக்கூடாது (சங். 23: 4).  உங்கள் உடல் மட்டுமே மரணத்தால் பாதிக்கப்படுகிறது (மத் 10:28) என்பதையும், மரணம் என்பது கர்த்தரோடு அவருடைய வீட்டில் நீங்கள் வாழப்போகும் உங்கள் வாழ்க்கையின் ஆரம்பம் மட்டுமே என்பதையும் நீங்களே உங்களுக்கு நினைவூட்டிக்கொள்ளுங்கள் (2 கொரி. 5: 8).

மரணத்தை உற்சாகமாக எதிர்கொள்ளுங்கள், ஏனென்றால் அது உங்கள் உண்மையான வீட்டில் இயேசுவோடு நீங்கள் வாழப்போகும் உங்கள் முடிவில்லாத வாழ்க்கையின் ஆரம்பம்.

ஜெபம்: ஆண்டவரே, நீங்கள் எனக்காக உருவாக்கிய வீட்டிற்குச் செல்ல எப்போதும் ஆயத்தமாக இருக்க எனக்கு உதவும். ஆமென்!

(translated from English to Tamil by Melwin Kingsley)

Comments

Popular posts from this blog

Who is truly wise?

What is your good name?

God doesn’t exist!?