தன்னார்வலர்கள் தேவை
உற்சாகத்துடன் நான் உமக்குப் பலியிடுவேன்; கர்த்தாவே, உமது நாமத்தைத் துதிப்பேன், அது நலமானது. சங் 54: 6
இப்போது நமக்குக் கிடைப்பதை விட சிறந்த ஊதியத்தை எதிர்பார்க்கிறோம் என்பது இயல்பானதல்லவா? கிறிஸ்தவ ஊழியத்தில் கூட இந்த விஷயம் உண்மையாக இருக்கலாம்.
தேவன் தன்னார்வலர்களைத் தேடுகிறார். 'நான் எவ்வளவு பெறுகிறேன்' என்பதை விட 'நான் எவ்வளவு கொடுக்க முடியும்' என்பது ஒரு சிறந்த கேள்வி (அப். 20:35). நீங்கள் அவருக்காக என்ன செய்கிறீர்கள் என்பதை தேவன் மறக்க மாட்டார் (எபி. 6:10). நான் ஒரு சிறந்த ஊதியத்திற்கு தகுதியானவனாக இருக்கலாம். ஆனால், தேவன் மேலும் சிறந்த ஊழியத்திற்கு தகுதியானவரல்லவா? இயேசுவே ஊழியங்கொள்ளும்படி அல்ல, ஊழியஞ்செய்யவே வந்தார் (மாற்கு 10:45).
தேவராஜ்ய வேலை செய்யும் தன்னார்வலர்கள் அதிக சம்பளம் பெறுகிறார்கள். இவ்வுலக அளவின்படி அது அதிகமில்லாமல் இருக்கலாம், ஏனெனில், முதலாளியாக இருப்பது தேவனே (கொலோ. 3: 23-24).
விருப்பமற்ற ஊழியராக அல்ல, மகிழ்ச்சியான தன்னார்வலராக இருங்கள்.
ஜெபம்: ஆண்டவரே, உமது ராஜ்யத்தில் மகிழ்ச்சியான தன்னார்வலனாக இருக்க எனக்கு சரியான முன்னோக்கைக் தாரும். ஆமென்.
(translated from English to Tamil by Melwin Kingsley)

Comments
Post a Comment