மெய்யான நீதி!

B. A. Manakala

மவுனமாயிருக்கிறவர்களே, நீங்கள் மெய்யாய் நீதியைப் பேசுவீர்களோ?  மனுபுத்திரரே, நியாயமாய்த் தீர்ப்பு செய்வீர்களோ? சங். 58:1.

"நான் நான்கு மணி நேரங்கள் இணைய தள வகுப்புகளைக் கவனிக்க வேண்டியதாய் இருக்கிறது. அவனுக்கு மட்டும் (இளைய சகோதரன்) ஒவ்வொரு நாளும் வெறும் முக்கால் மணி நேரம் தான். இது நியாயமா?" என்று என் மகள் கேட்கிறாள். 

தாவீது, தனது காலத்தில் இருந்த ஆட்சியாளர்களிடம்,  அவர்கள் மெய்யாகவே நீதிக்காக நிற்கிறார்களா என்று வினவுகிறார் (58:1). அவர்களுடைய சொந்த அநீதியின் மீது அவர்களது கவனத்தைச் செலுத்துவதற்கு அவர் முயற்சிக்கிறார் (58:2).

பணம், ஆற்றல், செல்வாக்கு ஆகியவற்றால் நீதி தோற்கடிக்கப்பட முடியுமா? பொதுவாக, எல்லோருமே நீதியை விரும்புகிறார்கள். நான் சரியாகத் தீர்ப்பளித்துச் சொல்கிறேன்..., 'என்னுடைய அயலானின் கண்ணில் இருப்பது ஒரு உத்திரம் என்று.., 
உண்மையிலேயே அது ஒரு சிறு துரும்பு தான் என்றாலும் கூட!' ஆனால், பிரச்சனை என்னவென்றால், மனிதருடைய பார்வையில், ஒரு நபருக்கு நீதியாய் இருப்பது மற்றொருவருக்கு அநீதியாய் இருக்கலாம்!

நீதியை வரையறுப்பதில், உங்களின் தரநிர்ணயம் என்ன? நீங்கள் எவ்வாறு நியாயமாய்த் தீர்ப்பளிப்பீர்கள்? 

உண்மையான நீதி, உண்மையான நீதிபதியால் மாத்திரமே சாத்தியம்! 

ஜெபம்: ஓ தேவனே, என்னுடைய மெய்யான நியாயாதிபதியே, நியாயமாய்த் தீர்ப்பளிக்க, எனக்குக் கற்றுத்தாரும். ஆமென்!

(translated from English to Tamil by Catherine Joyce)

Comments

Popular posts from this blog

Who is truly wise?

What is your good name?

God doesn’t exist!?