பயமா..? இல்லையா..?
நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன். தேவனை முன்னிட்டு, அவருடைய வார்த்தையைப் புகழுவேன். தேவனை நம்பியிருக்கிறேன். நான் பயப்படேன். மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்? சங். 56:3-4.
நாம் எதிர்கொள்கிற சில கேள்விகளுக்கு 'ஆம் மற்றும் இல்லை' என்ற பதிலை அளிக்க நாம் ஒருவேளை விரும்பலாம். இங்கு தாவீது, 'நான் பயப்படுகிறேன்' என்றும் 'நான் பயப்படேன்' என்றும் கூறுகிறார். இந்த இரண்டு வாக்கியங்களும் ஒரே சமயத்தில் உண்மையாக இருக்க முடியுமா?
அடிப்படையில், அது நம் நம்பிக்கை எங்கே இருக்கிறது என்பதைப் பொருத்தது என நான் நம்புகிறேன். வேறுவிதமாகக் கூறின், நாம் தேவனை நம்புகையில், நாம் பயப்பட முடியாது.
இவ்வுலகில் நாம் வாழ்கையில், துக்கம், சந்தோஷம் போன்ற எதிர்மாறான அனுபவங்கள் நம் வாழ்வில் கலந்தே வரும் (யோவா. 16:22). அவை அனைத்தையும், தேவனிடத்தில் நம்பிக்கை வைப்பதன் மூலமே நாம் கையாள முடியும். ஆனாலும், அழுகை, வருத்தம் போன்றவை இனி என்றுமே இல்லாத நாள் ஒன்று வருகிறது (வெளி. 21:4).
நீங்கள் பயந்தாலும் சரி, தைரியமாக இருந்தாலும் சரி, எப்போதும் தேவனை நம்புங்கள்.
ஜெபம்: கர்த்தாவே! என் வாழ்வின் எல்லா சூழ்நிலைகளிலும், உம்மை நம்ப எனக்கு தயவு செய்து உதவி செய்தருளும். ஆமென்!
(translated from English to Tamil by Catherine Joyce)

Comments
Post a Comment